Wednesday 17 April 2013

குறுநடை போடும் காலத்திலேயே வாசிக்க ஊக்குவியுங்கள்

உங்கள் குழந்தை குறுநடை போடுகிறது என்ற ஆனந்தத்தில் இருக்கிறீர்களா? விழுந்துவிடுவானா எதையாவது போட்டு உடைப்பானா எனப் பெற்றோர்கள் திகிலில் இருக்கும் காலமும் அதுதான். 

குறுநடைபோடும் காலம் என்பது பொதுவாக ஒன்று முதல் மூன்று வயது வரை எனக் குறிப்பிடுகிறார்கள். 




குறுநடைபோடும் காலமானது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மட்டும் முக்கியமானதல்ல.


அது குழந்தைகளின் 

  • அறிவாற்றல், 
  • உணர்ச்சிகளின் வெளிப்பாடு 
  • சமூக உறவுகளின் விரிவு 
போன்றவவை வளர்வதற்குமான மிகவும் முக்கிய காலப்பகுதியாகும்.


இக்காலத்தில் வாசிப்பதானது அவர்களது கற்கை ஆற்றலையும், அறிவு வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். 


இக்காலத்தில் அவர்களை வாசிக்க தூண்டுவதானது அவர்களை வாழ்நாள் முழுவதும் வாசிப்பில் ஆர்வம் கொள்ள ஊக்குவிப்பதாக அமையும் என American Academy of Pediatrics சொல்கிறார்கள்.



  • குழந்தையைக் கட்டித் தழுவி அமைதியும் செளகர்யமும் நிறைந்த இடத்தில்  குழந்தையுடன் கூடியிருந்து வாசியுங்கள். 
  • உங்கள் குழந்தை தவறாக உச்சரிக்கும் வார்த்தைகளைக் கவனத்தில் எடுத்து அவற்றை சரியான முறையில் நீங்கள் உச்சரித்து குழந்தையை அவதானித்து முயற்சி செய்து முன்னேற உதவுங்கள்.
  • வாசிப்பதை தெளிவாக மட்டுமின்றி மிகவும் ஆறுதலாகவும் செய்வதன் மூலம் அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை குழந்தை புரிந்து கொள்ள உதவ முடியும்.
  • குழந்தை உற்சாகமற்று சோர்வாக இருக்கும் நேரங்களில்  குழந்தையை அமைதிப்படுத்தி ஆற்றுப்படுத்தி மகிழ்ச்சியில் ஆழ்த்த வாசிப்பு நேரங்களைப் பயன்படுத்தலாம்.
  • ஒருபோதும் அது தண்டனையாக மாறக்கூடாது. அவ்வாறானால் அது உங்கள் நோக்கத்தையே கெடுத்துவிடும்.

எதிர்காலத்தில் வாசிப்பில் அக்கறை காட்டி அதில் மகிழச்சியுறும் பெரியவராக அந்தக குழந்தை வளரும்.


Thank You : http://hainallama.blogspot.com/

0 comments:

Post a Comment

 
-